×

விராலிமலை அருகே குடிநீர் தொட்டிக்குள் 2 குரங்குகள் இறந்து கிடப்பதாக புகார்..!!

புதுக்கோட்டை: விராலிமலை அரசு மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டிக்குள் 2 குரங்குகள் இறந்து கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் 2 குரங்குகள் இறந்து கிடப்பதை கண்டு நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையில் உள்ள குடிநீர் தொட்டியை உடனே சுத்தம் செய்ய வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post விராலிமலை அருகே குடிநீர் தொட்டிக்குள் 2 குரங்குகள் இறந்து கிடப்பதாக புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Pudukottai ,Viralimalai Government Hospital ,
× RELATED மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்பு: கொன்று எரிக்கப்பட்டாரா?